சக்லேஷ்பூர்

பெங்களூரில் இருந்து சலித்து கொண்டு தயாரான பயணம். பயணத்தின் ஏற்பாடு வேலைகளும், உடல் நல குறைவுக்காக உட்கொள்ளும் கஷாயமும், இடமாற்றமும் இந்த பயணத்தை நிறுத்த எத்தனித்தது. அதை முறியடித்து கிளம்பினோம். இதெல்லாம் பயண நாளின் முன்பு வரைதான். பொழுது விடிந்த உடன் அணைத்து தயக்கங்களும் பறந்து போகும். அதிகாலையில் பெங்களூரில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் ஏறினோம். நான்கு மணி நேரத்தில் சக்லேஷ்பூர் வந்தடைந்தோம். சக்லேஷ்பூர் மலையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது, மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. … Continue reading சக்லேஷ்பூர்

பரம்பிக்குளம்

காடும் மலையும் புலியும் நாங்கள் செல்லும் ஊருக்கு அருகில் இருந்தால் உடனே பயணத்துக்குள் வந்து விடும். புலி இருக்க தேவை இல்லை. புலி என்ற பெயர் இருந்தால் கூட போதும். அங்கு செல்ல எல்லா மெனக்கெடல்களும் நடந்தேறி விடும். அப்படிதான் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் சென்றோம். பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு ஆனைமலை வழியாக டாப் ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் சென்றோம். இரண்டு கிமீ வித்தியாசத்தில் டாப் ஸ்லிப் தமிழ் நாட்டிலும், பரம்பிக்குளம் கேரளத்திலும் உள்ளது. மலையில் ஏறும் … Continue reading பரம்பிக்குளம்

பாலக்காடு

கோடை விடுமுறையில் ஒரு சிறு பயணமாக பாலக்காடு சென்று இருந்தோம். கோவையில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் வந்து சேர்ந்ததுனாலும், உணவு மொழி வெயில் என எதுவும் மாற்றமில்லாமல் இருந்ததுனாலும் கேரளத்தில் இருந்த உணர்வு இல்லை. ஒரு புகழ் பெற்ற ஜூஸ் (Sindhu Cool Bar) கடைதான் முதலில் சென்றது. கடையின் அலங்காரம் வெகுவாக கவர்ந்தது. சுவர் முழுதும் அனைத்து தெய்வங்களும் புகைப்படமாகவும் சிற்பங்களாகவும் இருந்தனர். சிவன் விஷ்ணு புத்தர் முதல் ராமகிருஷ்ணர் விவேகானந்தர் வரை. கூடவே … Continue reading பாலக்காடு

Sophie’s World – புத்தகம்

தத்துவத்தை பற்றிய அறிமுக புத்தகங்களை தேடும் போது எதேச்சையாக கண்ணில் பட்ட புத்தகம், இந்த 'Sophie 's world'. ஜோஸ்டீன் கார்டர் குழந்தைகளுக்காக எழுதிய புத்தகம் (15+ ஆவது இருக்க வேண்டும்). வாழ்க்கையின் முக்கியமான தத்துவ கேள்விகளை அறிமுகம் செய்து, அதை கடந்த 2500 வருடங்களாக இக்கேள்விகளை ஆராய்ந்த ஐரோப்பிய தத்துவ ஞானிகளையும் கருத்துக்களையும் அறிமுகம் செய்கிறது. "He who cannot draw on three thousand years is living from hand to mouth" … Continue reading Sophie’s World – புத்தகம்

சித்தார்த்தா – புத்தகம்

ஹெர்மன் ஹெஸ்ஸே நூறு வருடங்களுக்கு முன்பு எழுதியது. அறிமுகம் தேவை இல்லாத புத்தகம். படிக்கும் முன் ஆசிரியரை பற்றி அறியும் ஆவல். இது ஒரு வித சந்தேக புத்தியோ என்று கூட தோன்றுகிறது. தராசிட என்னக்கு என்ன தெரியும் என்றும் தோன்றும். இருந்தும் பார்த்ததில், ஹெஸ்ஸேவின் வாழ்வும் தேடலும் பல இடங்களுக்கும் பல கோணங்களுக்கும் சென்றுள்ளது. பௌத்தம், இந்திய அறிமுகம் அதில் ஒரு சில வருடங்கள். தேடலை பிரதானமாக கொண்ட கதை. புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த … Continue reading சித்தார்த்தா – புத்தகம்

நிற்க!

சில சமயங்களில் ஏதாவது ஒன்று நம்மை நிறுத்தி வைக்க பார்க்கிறது. நம் எண்ண ஓட்டத்தை, தினசரி ஓடிக்கொண்டிருக்கும் துடிப்பை, படித்துக்கொண்டிருக்கும் விஷயங்களை, வேலையை, உணவை. இப்படி எல்லா விஷயங்களையும் நின்று யோசிக்க வைக்கும். போய்க்கொண்டிருக்கும் பாதையை கேள்வி எழுப்பும். மாற்று கருத்துக்களை உள்புகுத்தும். பல புதிய பாதைகளை காட்டி தள்ளப்பார்க்கும். என்றோ கிடப்பில் போட்ட விஷயங்களை தேவையானது போல் கொண்டு வரும். நேற்று வரை தீர்மானமாய் இருந்த கருத்துக்களை தடுமாற்றம் கொள்ள செய்யும். வருங்காலத்தை மாற்றி யோசிக்க … Continue reading நிற்க!

ஓநாய் குலச்சின்னம் – புத்தகம்

Wolf Totem என்ற சீன மொழியில் எழுதப்பட்ட நாவலின் மொழிபெயர்ப்பு. சி.மோகன் அவர்களால் மொழிபெயர்க்க பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு என்று எங்குமே உணரவில்லை. இது மங்கோலிய நிலத்தில் நாடோடி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த மேய்ப்பர்களின் கதை. அதில் வாழும் ஓநாய்கள் கதையின் நாயகர்கள். ஓநாய்களை தெய்வத்தின் படைப்பாகவும் மேய்ச்சல் நிலத்தின் நண்பனாகவும் நம்பும் மேய்ப்பர்கள். மங்கோலியா புல்வெளி பிரதேசம். வருடத்தில் பாதி குளிர் காலமாகவும், சிறிய கோடை காலமும் இளவேனிற்காலமும் கொண்ட பிரதேசம். மரங்கள் இல்லாத புல்வெளி. மேய்ச்சல் நிலம். … Continue reading ஓநாய் குலச்சின்னம் – புத்தகம்

ஜெய்ப்பூர்

ரண்தம்போரில் இருந்து ஜெய்ப்பூர் ரயிலில் பயணித்தோம். அது மும்பையில் இருந்து ஹரியானா செல்லும் தொலைதூர வண்டி. எங்கள் பெட்டியில் ஒரு மும்பை குடும்பம் இரு குழந்தைகளுடனும், ராஜஸ்தான் தந்தை மகளும் பயணித்தனர். கூடவே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெரியவரும் உடன் பயணித்தார். பொதுவான மொழி பேசாத போதும் பேச்சு வார்த்தை சுவாரஸ்யமாக போனது. ராஜஸ்தான் தந்தை கம்பீரமாக கோட் அணிந்து துளியும் தயக்கமில்லாமல் அவரது மொழியில் பேசினார். அதுவே அதிகம் புரிய வைத்தது. மாநிலத்தில் இரண்டு இடங்களில் … Continue reading ஜெய்ப்பூர்

ரண்தம்போர் தேசிய பூங்கா

பரத்பூரில் ராஜஸ்தானின் எல்லையில் உள்ள ஊர். ஆக்ராவில் இருந்து 50 கீ.மீ தூரம். அங்கிருந்து ரயிலில் சவாய் மாதோபூர் வந்து சேர்ந்தோம். இரண்டு மணிநேர பயணம். வழி நெடுக கடுகு வயல்களே நிறைந்திருந்தன. தாளிப்பை தவிர வேறெங்கும் கடுகு பயன்படுத்திராத நம்மக்கு, இவ்வளவு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. ராஜஸ்தான் தான் கடுகு உற்பத்தியில் முதலிடம் என்பதில் ஆச்சர்யம் இல்லை. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புலியின் படங்கள் நம்மை வரவேற்கின்றன. சுற்றுலா பயணிகள் எங்கும். ரண்தம்போர் … Continue reading ரண்தம்போர் தேசிய பூங்கா