பெங்களூரு வழி கோலார்

பெங்களூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற வார இறுதியில் பயணித்திருந்தோம். இருந்த நேரத்தில் நகரில் பார்க்க இடம் தேடி கிடைக்காமல் வீண் செலவுகள் செய்து கழிந்தன. உருப்படியாக சென்ற இடம் HAL அருங்காட்சியகம். உருப்படி என நினைத்து வீண் செலவு செய்த இடங்களும் அடங்கும். HAL அருங்காட்சியகம் நம் நாட்டின் விண்வெளித் துறையின் வளர்ச்சியை விரிவாக காண்பிக்கின்றன. 1910களில் இருந்து பறக்க ஆரம்பித்த சிறிய பெரிய விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளே அமர்ந்து செல்லும் போது ஆகாயமும் பறப்பதுவும் … Continue reading பெங்களூரு வழி கோலார்

புதுமைப்பித்தன்

மூன்று மாதங்கள் இருக்கும் புதுமைப்பித்தன் கதைகளை படிக்க தொடங்கி. கதைகளில் கிண்டலும் கேலியும் தாண்டி அவரது எண்ணங்கள் மேலே வந்து கொண்டே இருக்கிறது. போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறார். நாம் கிடந்தது உழல வேண்டி உள்ளது. கடவுளும் கந்தசாமி பிள்ளையும், வேதாளம் சொன்ன கதை, செல்லம்மாள் என பத்துக்கும் மேற்பட்ட கதைகளை படித்த பிறகு ஆசிரியரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என தோன்றியது. யார்தான் இந்த ஆள். இவரை பற்றி இவரது நண்பர் ரகுநாதன் … Continue reading புதுமைப்பித்தன்

சென்னை மாரத்தான் 10km

ஓடுவது என்பது சில வருடங்களாக விட்டு விட்டு நிகழும் முயற்சி. நிறுத்துவதற்கு பல காரணங்கள் வந்து நிறுத்தி விடும். மீண்டும் தொடங்குவதற்கு சில காரணங்கள் வந்து எழுப்பி விடும். இதுவரை ஒரு ஏழு எட்டு 10 கிமீ ஓடியாயிற்று. ஓடுவது என்றால் முழுதூரமும் அல்ல. முக்கால்வாசிக்கும் மேல் ஓடி ஆங்காங்கே நடந்து என்று. கடைசியாய் ஓடியது கொரோனாவுக்கு முன். ஏன் ஓடுகிறேன் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. நடப்பது போதாதா ?நடப்பது பிடித்த ஒன்று. என்ன தூரம் நடந்தாலும் … Continue reading சென்னை மாரத்தான் 10km

வில்

குழந்தைகள் - கலீல் ஜிப்ரான் மகளுக்கு எட்டு வயதாக போகிறது. கலீல் ஜிப்ரானின் கவிதை படித்து பல வருடங்கள் இருக்கும். ஆனால் இந்த வருடத்தில்தான் பல முறை ஞாபகம் வருகிறது. மகள் வளர்கிறாள், முழுவதுமாய் அணைப்பில் இருந்து சிறிது சிறிதாக வெளியே செல்வது தெரிகிறது. சில இடங்களில் அருகில் நின்றும், சில இடங்களில் எதிரே நின்றும், தெளிவாக தோள்கொடுத்தும் பேசுகிறாள். சில நாட்களுக்கு முன் நாங்கள் இருவரும் கடைக்கு செல்லும் வழியில் நடந்த உரையாடல். நான் அதற்கு … Continue reading வில்

குழந்தைகள்

கலீல் ஜிப்ரானின் "குழந்தைகள்" ஆங்கிலத்தில் படித்து, அதன் மொழியாக்கம் நிறைவளிக்காமல் நானே மொழிபெயர்க்க முயன்றது. On Children - Kahlil Gibran உன் குழந்தைகள் உனது குழந்தைகளே அல்ல. தன்னை தானே பெருக்கிக் கொள்ள தவிக்கும் உயிர் சக்தியின் மகன்களும் மகள்களுமே அவர்கள். அவர்கள் உன்வழியே வந்தவர்களே ஒழிய உன்னால் வந்தவர்கள் கிடையாது,உன்னோடு இருப்பதால் அவர்கள் உனது சொத்து என்றில்லை. அவர்களுக்கு உனது அன்பை புகட்டலாம்; சிந்தனைகளை அல்ல,அவர்களுக்கென்றே சிந்தனைகள் உண்டு. அவர்களது உடலுக்கு நீ அடைக்கலம் … Continue reading குழந்தைகள்

கன்னியாகுமரி

கர்நாடக பயணம் காவேரி பிரச்சனை காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்து செய்ய வேண்டி இருந்தது. அதே நாளில் கன்னியாகுமரி செல்லலாம் என்ன திட்டம் உருவானது. சென்னையில் இருந்து மதுரை, அங்கிருந்து கன்னியாகுமரி. கன்னியாகுமரி செல்லும் வழியில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நிறுத்தினோம். கூட்டம் அலைமோதியது. கோவிலுக்கு செல்லும் நோக்கம் மாறிக் கொண்டே வருகிறது. சிறுவயதில் கடவுள் கல்லுக்குள் இருப்பதாக நினைத்து வணங்கியது, இன்று அதே கோவிலில் மனிதனின் கடவுளை பார்க்கவே செல்கிறோம். அவனுடைய முயற்சி, கனவு, அதைத்தாண்டிய … Continue reading கன்னியாகுமரி

Coffee!

ஆங்கிலத்தில் அழகாக சொல்ல முடிவது தமிழில் எழுத முடியவில்லை. அதனால் coffeeயை coffee என்றே சொல்லலாம். சிறு வயது முதல் குடித்துதான் என்றாலும் முதலில் அதை ஒரு பொருட்டாக மதித்து அருந்தியது அமெரிக்காவில் தான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு அங்கிருந்த போது, அலுவலக நண்பர்கள் அறிமுகப்படுத்தியது. ஸ்டார் பக்ஸ்க்குள் சென்றால் சுண்டி இழுக்கும் மணம். கால் லிட்டர் கோப்பை வழிய கருப்பு காபியை வாங்கி அதில் சிறிதளவு பால் விட்டு, சர்க்கரை சேர்த்து குடித்தது. காலை மாலை … Continue reading Coffee!

தேடல்!

எதை தேடுகிறேன் என்று தெரியாமல் தேடுவதுதெரிந்து விட்டால் தேடல் காணாமல் போய்விடும் அல்லவா! ஏன் தேடுகிறேன் என்று சளித்துக் கொண்டதுண்டுசுற்றம் கற்று கொடுத்த விடைகள் போதியதில்லைஇவ்வளவுதான் என்று ஏற்கவும் முடிவதில்லை உலகியல் ஆசைகள் முன் செல்ல முடிவதில்லைபுத்தகங்கள் பயணங்கள் திசையை மாற்றி அமைக்க முடிகிறதே தவிரதீயை அடக்கவோ அமைதி படுத்தவோ முடிவதில்லை காற்றில் ஆடி ஆடி சென்று கொண்டிருக்கிறேன் போகும் வழி என்னவோ மகிழ்வாகத்தான் இருக்கிறதுபோய் கொண்டிருக்கிறோம் என்பதே மகிழ்ச்சி தானே! போகும் வழியில் கடக்கும் நண்பர்களும் … Continue reading தேடல்!

ஏன் புராணங்கள் ?

Joseph Campbell (The Power of Myth) - இந்த தொடர் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. புராணங்களின் மேல் இருந்த பார்வையை மாற்றி அமைக்கிறது. புராணங்களில் நமக்கு என்ன இருக்கிறது என்று பார்க்க தூண்டுகிறது. இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்கள் முன்னர், ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பழங்குடிகளின் கதைகள் ஒன்று போல் இருக்கின்றன. தெய்வப்பிறவியின் புனிதமான பிறப்பு, இறப்பு, பின்பு உயிர்த்தெழுதல் என்பது அனைத்து பண்பாட்டிலும் உள்ளது. பிரதான உணவாக மனிதனுக்கு அன்று இருந்த விலங்குகள். … Continue reading ஏன் புராணங்கள் ?

The Bite of the Mango – புத்தகம்

நமக்கிருக்கும் கவலைகள் ஏராளம். பிரச்சனைக்களும் தான். வீட்டில் தொடங்கி, அலுவலகம், சொந்தம், உடல்நிலை என பட்டியல் போடலாம். அப்படி ஏதாவது பிரச்சனையில் இருக்கும் போது, அதை விட பெரிய பிரச்சனை ஒன்று நிகழும் போது, சின்னதை விட்டு பெரியதை பிடித்துக்கொள்வோம். சிறிதோ பெரிதோ, முட்டி நிற்கும் சூழ்நிலை வரும் போது படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. நம் மனதில் நன்றி உணர்வை உருவாக்கும். பிரச்சனைகளால் நின்று இருந்த நல்ல விஷயங்களை துவங்கச் செய்யும். நம் பிரச்சனைகள் நிஜமாகவே … Continue reading The Bite of the Mango – புத்தகம்